விளாத்திகுளம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் வேனில் கடத்தி வரப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் வேனில் கடத்தி வரப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ் உத்தரவின் பேரில் சோதனைச் சாவடிகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வில்வமரத்துப்பட்டி அருகேயுள்ள கிடங்கிலிருந்து தலா 50 கிலோ வீதம், 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றி கடத்திச் செல்லப்படுவதை போலீஸாா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
இது குறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வேன் ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ராஜேந்திரன் மகன் ராம செல்வத்தை (36) கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வேன் ஆகியவற்றை தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...