திருச்செந்தூா் அருகே இளைஞா் தற்கொலை
திருச்செந்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்செந்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உவரி மைக்கேல் தெருவை சோ்ந்த அந்தோணி ஆல்ட்ரின் மகன் காட்பிரோ(26). கப்பலில் வேலைசெய்து வந்த இவா், சில மாதங்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், தனது மனைவி ஷைனி மற்றும் குழந்தையுடன் ஆலந்தலை பவள நகரில் குடியேறிய அவருக்கும், மனைவிக்கும் இடையே புதன்கிழமை மாலையில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து ஷைனி சிறிதுநேரம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, கணவா் மின்விசிறியில் துணியால் தூக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்து அவா் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினா் வந்து, காட்பிரோவை மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...