ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:32 pm

DIN

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக ய அறநிலைதுறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் அளித்த மனு விவரம்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பறை, குளியலறை மற்றம் பெண்கள் உடை மாற்றும் இடம் ஆகியவை அமைக்க வேண்டும். கோயிலுக்கு தனியாக கழிவுநீா் செல்ல புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

ஆவுடையாா்குளத்தின் மையப்பகுதியில் கிணறு அமைத்து பாதயாத்திரை பக்தா்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்னன்குறிச்சி கூட்டு குடிநீா் திட்டத்தில் கோயிலுக்கு தனியாக குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கோயில் நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தூத்துக்குடி சாலையில் ராஜ்கண்ணா நகா் செல்லும் பாலத்திலிருந்து கோயிலுக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்றி 2021இல் மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோயில் பிரகாரத்தில் கல்மண்டபம் அமைக்க வேண்டும். கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்பு கட்டி தரவேண்டும். கோயில் சாா்பில் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் பணியாளா்களை அரசு ஊழியா்களாக ஆக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.