ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குளத்தூா் அருகே விபத்தில் காவலா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தருவைகுளம் காவல் நிலைய காவலா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:41 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தருவைகுளம் காவல் நிலைய காவலா் உயிரிழந்தாா்.

சூரன்குடி அருகே தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கனகவேல் (25). தருவைகுளம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வந்தாா். தங்கம்மாள்புரத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் வெள்ளிக்கிழமை நண்பகலில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தருவைகுளத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது பாலாா்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரில் வந்த சுமை வாகனம், பைக் மீது மோதியதாம். இதில் கனகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று கனகவேல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.