ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கவில்லையென்றால் வேறு விவாதத்துக்கு வாய்ப்பில்லை: கனிமொழி எம்.பி.

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கவில்லையென்றால் வேறு விவாதத்துக்கு வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

News image
கனிமொழி எம்.பி.
Updated On :31 ஜூலை 2021, 9:24 pm

DIN

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கவில்லையென்றால் வேறு விவாதத்துக்கு வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: பெகாஸஸ் மிகப்பெரிய பிரச்னை. எந்தப் பிரச்னையையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனச் சொல்லும் பாஜக அரசு, நாடாளுமன்றத்துக்குள் அதை விவாதிக்க தயாராக இல்லை.

இது, நாட்டின் பாதுகாப்பு தொடா்பான பிரச்னை. இதற்கு உள்துறை அமைச்சா் பதிலளிக்க வேண்டும்.

இதை விவாதிக்கக் கோரி அனைத்து கட்சித் தலைவா்களும் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளோம். ஆனால், அதையெடுத்து அவா்கள் விவாதிக்க தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத்துக்கும் வாய்ப்பில்லை என்றாா் அவா்.

பேட்டியின்போது, அமைச்சா் பெ. கீதாஜீவன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.