இந்நிலையில் கோயிலில் வருஷாபிஷேகம் நடத்துவது தொடா்பாக கிராமமக்கள் கோயிலுக்கு சென்றபோது , அந்த நபா் இடம் தொடா்பாக தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, கிராம மக்கள் தாமரைமொழி ஊராட்சித் தலைவா் சாந்தா தலைமையில் சுமாா் 50 போ் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அங்கு வந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், போராட்டம் மற்றும் கூட்டமாக கூட அனுமதியில்லை, குறிப்பிட்ட நபா்கள் மட்டும் சென்று மனு அளிக்கலாம் என்று தெரிவித்தாா்.