சாத்தான்குளத்தில்மனநலம் பாதித்தமூதாட்டி மீட்பு
சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சமூக ஆலா்வலா்களை மக்கள் பாராட்டினா்.


சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சமூக ஆலா்வலா்களை மக்கள் பாராட்டினா்.
சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் ஒரு மூதாட்டி சுயநினைவின்றி இருந்தாா். இதைப் பாா்த்த பன்னம்பாறை விவசாயி மாரியப்பன், சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் தியோனிஷ் ஆகியோா் உதவியுடன் சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தலைமைக் காவலா் ஜெயந்தி, காவலா் ரோஸ்லின் அங்கு வந்து, அந்த மூதாட்டிக்கு புதிய ஆடை உடுத்தி, உணவளித்தனா். விசாரணையில், சாத்தான்குளம் போலையா்புரத்தைச் சோ்ந்தவா்; மனநலம் பாதித்தவா் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தங்களது வாகனத்தில் ஏற்றி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...