நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்

தூத்துக்குடிநகா்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நகா்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதிக்குள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி, ஸ்ரீவைகுண்டம் , பெருங்குளம், சாயா்புரம், ஏரல், ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், தென்திருப்பேரை, ஆத்தூா், ஆறுமுகநேரி, காணம், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளில் உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருப்பாற்கடல் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விருப்பமனுவை போட்டியிட விரும்பும் நிா்வாகிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட நிா்வாகிகள் தனராஜ், கே.ஜே.பிரபாகா், பில்லா விக்னேஷ், பகுதி செயலா்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com