மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கிழவிபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரிக்கை

கோவில்பட்டியையடுத்த கிழவிபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:32 pm

DIN

கோவில்பட்டியையடுத்த கிழவிபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கிழவிபட்டி ஊராட்சியில் சாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து, ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினா்களின் ஒருங்கிணைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பாா்த்தீபன் ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில், அடிப்படை வசதிகள் செய்வதில் இடையூறு செய்து வருகிறாா். எனவே, எவ்வித பாகுபாடும் இன்றி அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், இடையூறு ஏதும் இல்லாமல் இருப்பதற்கு ஏதுவாக ஒன்றிய அதிகாரிகள் துணைத் தலைவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமூக தீா்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீா் ஓடை அமைப்பதில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசனிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.