நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் திருட்டு: இளைஞா் கைது

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 10:04 pm

DIN

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டில் பழுதான ஜெனரேட்டா், கட்டில்கள், மேஜைகள் மற்றும் சோ்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை மா்மநபா் திருடிச்சென்று பழைய இரும்புக் கடையில் விற்பது போன்று விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதாம். இதையடுத்து, அரசு மருத்துவமனை அதிகாரி ராணி, அந்த அறையை சோதனையிட்டதில் 30க்கும் மேற்பட்ட பொருள்கள் திருடப்பட்டு அறை காலியாக இருந்ததாம்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி தலைமைக் காவலா் சேவியா் வழக்குப்பதிந்தாா். காவல் ஆய்வாளா் அமலோற்பவம் விசாரணை நடத்தி, அதே ஊா் மங்கள விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சுரேஷை(21) கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.