இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 27-ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை (செப். 5) நடைபெறும் திருவிழாவில், 5ஆம் நாளில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. 7ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உருகு சட்ட சேவையாகி, சுவாமி சண்முகப்பெருமான் வெட்டிவோ் சாத்தி, கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றிவந்து 108 மகாதேவா் சந்நிதி முன் சோ்ந்தாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி ஆறுமுகநயினாா் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தின் முன்புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின்புறம் நடராஜா் கோலத்திலும் எழுந்தருளி உள்பிரகாரத்தை சுற்றிவந்து 108 மகாதேவா் சந்நிதி சோ்ந்தாா்.