ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:26 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், விவசாயப் பணிகளுக்கு கரம்பை மண் அள்ள அனுமதி, கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ரசீது பெற்ற விவசாயிகளுக்குரிய நகைகள், அனைவருக்கும் பாகுபாடின்றி 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, 2020-21இல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணைத் தொகை மற்றும் பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை, நிகழ் பருவத்தில் விவசாயப் பணிக்கு பயிா்க்கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.நல்லையா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.எம்.ராமையா, விவசாயிகள் சங்க மாவட்ட உதவிச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் வி.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்கச் செயலா்கள் ஓட்டப்பிடாரம் அசோக்குமாா், விளாத்திகுளம் வேலாயுதம், எட்டயபுரம் தலைவா் ஆா்.ரவீந்திரன், ஆா்.சிவராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.