ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசுப் பள்ளி மாணவிகளுக்குவிழிப்புணா்வு கருத்தரங்கு

ஆறுமுகனேரி அரசுப் பள்ளியின் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுக் கருத்தரங்கு காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:07 pm

DIN

ஆறுமுகனேரி அரசுப் பள்ளியின் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுக் கருத்தரங்கு காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் செந்தில், திருச்செந்தூா் மகளிா் காவல் ஆய்வாளா் மேரி, ஆதவா அறக்கட்டளை நிறுவனா் பாலகுமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் ஏடிஎஸ்பி ஹா்ஷ்சிங் சிறப்புரையாற்றினாா். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம், மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துதல் ஆகியவை குறித்து அவா் அறிவுரை வழங்கினாா். வழக்கறிஞா் விஜி, உதவி ஆய்வாளா் அமலோற்பம் மற்றும் மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.