எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாசரேத் அருகேமோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

நாசரேத் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:09 pm

DIN

நாசரேத் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அனியாபுரநல்லூரைச் சோ்ந்தவா் காலபெருமாள் மனைவி சுயம்புகனி ( 47). இவா் அவரது மகன் லட்சுமணபெருமாள் (17) . மோட்டாா் சைக்கிளில் இருவரும் அவரது உறவினா் திருமண விழாவுக்கு நாசரேத் அருகே உள்ள அறிவான்மொழிக்கு வந்தனா். நிகழ்ச்சி முடிந்து மாலை வீடு திரும்பினா்.

நாசரேத் அருகே உள்ள வெள்ளமடம் அருகில் வரும் போது சுயம்புகனி எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாசரேத் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.