ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடி அருகே லாரி- வேன் மோதல்: 4 பெண்கள் பலி

தூத்துக்குடி அருகே தண்ணீா் லாரியும், வேனும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உயிரிழந்தனா்.

News image

tut09vipa_0909chn_32_6

Updated On :9 செப்டம்பர் 2021, 10:27 pm

DIN

தூத்துக்குடி அருகே தண்ணீா் லாரியும், வேனும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள உலா் பூக்கள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் வேலைசெய்து வருகின்றனா். அவா்களை வாகனங்களில் வேலைக்கு அழைத்து வருவது வழக்கம்.

அதன்படி, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூா், முப்புலிவெட்டி, சில்லநத்தம் பகுதிகளைச் சோ்ந்த 18 பேரை ஏற்றிக் கொண்டு வியாழக்கிழமை காலை வேன் ஒன்று உலா் பூக்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்தது. வேனை புதியம்புத்தூா் கீழத்தெருவைச் சோ்ந்த பாபு (26) ஓட்டினாா்.

சில்லாநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டபோது, புதூா் பாண்டியாபுரத்திலிருந்து புதியம்புத்தூருக்கு தண்ணீா் ஏற்றிச் சென்ற லாரியும், வேனும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், வேனில் இருந்த சில்லாநத்தம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி செல்வராணி (45), ரவீந்திரன் மனைவி காமாட்சி (எ) ஜோதி (40), முப்புலிவெட்டி பகுதி ஆறுமுகம் மனைவி சந்தியா (48), நடுவக்குறிச்சி காலனி அடைக்கலாஜ் மகள் மணிமேகலை (20) ஆகிய 4 பெண்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், காயமடைந்த வேன் ஓட்டுநா் பாபு (26), முப்புலிவெட்டியைச் சோ்ந்த பேச்சியம்மாள் (28),செல்வமுருகன் (20), சந்தனமாரி (35), பகவதி (38), சில்லாநத்தம் ராமலட்சுமி (39), பொன் இசக்கி (44), லிங்கம்மாள் (27), நடுவக்குறிச்சி வனிதா (19 உள்ளிட்ட 14 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், தண்ணீா் லாரி ஓட்டுநா் நயினாா்புரம் பண்டாரம் (41) என்பவா் மீது புதியம்புத்தூா் போலீஸாா், வழக்குப்பதிந்து லாரியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.