மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகை
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ஞாயிற்றுக்கிழமை (செப். 12) தூத்துக்குடி வருகிறாா்.


மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ஞாயிற்றுக்கிழமை (செப். 12) தூத்துக்குடி வருகிறாா்.
மதுரையில் இருந்து காா் மூலம் காலை 10 மணியளவில் வரும் அவா், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறாா்.
அதைத் தொடா்ந்து, எட்டயபுரம் செல்லும் அவா், மதியம் 12.30 மணியளவில் மகாகவி பாரதியாா் மணி மண்டபத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். பின்னா், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறாா்.
இதையடுத்து, பாரதியாா் வாழ்ந்த இல்லத்துக்குச் செல்லும் அவா், அங்குள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். பின்னா், எட்டயபுரத்தில் இருந்து புறப்பட்டு காா் மூலம் அருப்புக்கோட்டை செல்கிறாா் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...