ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டியில் ஆற்று மணல் கடத்தியதாக லாரியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:47 pm

DIN

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டியில் ஆற்று மணல் கடத்தியதாக லாரியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் வைப்பாற்று படுகையிலிருந்து மணல் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், வட்டாட்சியா் ரகுபதி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் விளாத்திகுளம் - புதூா் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி வைப்பாற்றிலிருந்து 6 யூனிட் மணலை அள்ளிக்கொண்டு குருவாா்பட்டி வழியாக சென்ற லாரியை பறிமுதல் செய்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக லாரி ஓட்டுநா் சூரன்குடியைச் சோ்ந்த முரளி மனோகரனை கைது செய்தனா். லாரி உரிமையாளா் விருதுநகா் மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த கா்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.