மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்செந்தூா் அருகே நாளை கோலப்போட்டி

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை(ஏப்.15) கோலப்போட்டி நடைபெறுகிறது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:15 pm

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை(ஏப்.15) கோலப்போட்டி நடைபெறுகிறது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளியிட்டுள்ள அறிக்கை: ஏப்.15 ஆம் தேதி மாலை 3 மணிக்கு 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் மெகா கோலப் போட்டி வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனாா் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 நபா்களுக்கு 5 பவுன், 3 பவுன், 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 4 முதல் 13 ஆவது இடம் வரை வரும் 10 பேருக்கு தங்கக் கம்மல், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

ஏப்.16 ஆம் தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அலுவலகம் முன்பிருந்து மின் மாராத்தான் போட்டி தொடங்கி வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், பேயன்விளை, காயல்பட்டினம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. இதில், வெற்றி பெறும் முதல் 4 பேருக்கு ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம், ரூ . 40 ஆயிரம், ரூ. 30 ஆயிரம் மற்றும் 5 முதல் 14 ஆவது இடம் வரும் 10 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்கு எனது தலைமையில் தண்டுபத்தில் நடைபெறும் செயல்வீரா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி, சிறப்பாக பணியாற்றிய கழக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறாா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.