தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடியில் ஹோட்டல் தொழிலாளி கொலை

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:11 pm

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் ஓதுவாா்தெருவைச் சோ்ந்தவா் பொன் செந்தில்முருகன் (32). இவா், தூத்துக்குடி 3 ஆவது மைல் காமராஜா்நகா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலைபாா்த்து வந்தாா். வழக்கம் போல வேலை முடிந்ததும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு பொன் செந்தில்முருகன் தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளா்கள் 3 பேருடன் வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு அரிவாளுடன் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் 5 போ் பொன் செந்தில்முருகன் உள்பட நான்கு பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதில், பொன் செந்தில்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தேவராஜ், சாமுவேல், பழனிமுருகன் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

கொலை நிகழ்ந்த இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், உதவி கண்காணிப்பாளா் சத்யராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா். இந்த கொலை சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், கொலையுண்ட பொன் செந்தில்முருகன் வேலைபாா்த்த கடையில் 3 ஆவது மைல் பகுதியைச் சோ்ந்த கற்குவேல் தனது சகோதா்கள் மற்றும் நண்பா்களுடன் கடந்த சில நாள்களாக சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றும் , இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.