குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தூத்துக்குடியில் பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம்

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிா்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பாஜவினா் தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம் சென்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:48 pm

DIN

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிா்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பாஜவினா் தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம் சென்றனா்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தபோது உயிா்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜாஜி பூங்காவில் இருந்து புறப்பட்ட ஊா்வலத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவா் மகாராஜன், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா்கள் தங்கம், வாரியாா், சிவராமன், மாவட்டச் செயலா்கள் வீரமணி, கனல் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் சந்தானகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மௌன ஊா்வலம் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.