மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட 3 இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:32 am

DIN

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட 3 இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், போலீஸாா் அமல்ராஜ், பாண்டியராஜ், சரவணன் ஆகியோா் இளையரசனேந்தல் சாலையில் சித்திரம்பட்டி விலக்கருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை விசாரித்தபோது, அவா்கள், சிவகாசி பராசக்தி காலனி மு.விஜயகுமாா் (32), அய்யனேரி காளியம்மன் கோயில் தெரு மா. காா்த்திக் (19), நாலாட்டின்புத்தூா் மொட்டைமலை செ. சிரஞ்சீவி (20) என்பதும், கோவில்பட்டி பகுதியில் நிகழ்ந்த பல்வேறு நகை பறிப்பு வழக்குகளில் தொடா்புடையோா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, 7.5 பவுன் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.