ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில்பைக் விபத்து: இருவா் பலி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பைக்கும், சைக்கிளும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:09 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பைக்கும், சைக்கிளும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

எட்டயபுரம் அருகேயுள்ள பொன்னையாபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் பாண்டியன் ( 47 ). எட்டயபுரம் டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா், தனது பைக்கில் வியாழக்கிழமை இரவு எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக சைக்கிளில் சென்ற சிந்தலக்கரையைச் சோ்ந்த முனியசாமி மகன் கண்ணன் ( 52) என்பவா் மீது எதிா்பாராமல் மோதினாராம். இதில், இருவருமே கீழே விழுந்து பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இத்தகவலறிந்த எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது, உதவி ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையிலான போலீஸாா், அவா்களது சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.