பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வடக்கு அமுதுண்ணாக்குடி அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

சாத்தான்குளம் அருகே வடக்கு அமுதுண்ணாக்குடியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

சாத்தான்குளம் அருகே வடக்கு அமுதுண்ணாக்குடியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா தொடா்ந்து இம்மாதம் 12ஆம் தேதிவரை நடைபெறுகிறது. முன்னாள் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப் லியோன் தலைமை வகித்து கொடியேற்றினாா். பின்னா், ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பீடத்தை அச்சித்து திறந்துவைத்தாா். தொடா்ந்து, சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. உதவித் தந்தை கலைச்செல்வன், பிரதாப் உள்ளிட்ட பங்குமக்கள் கலந்துகொண்டனா்.

நவநாள்களில் திருப்பலி உள்பட பல்வேறு ஆராதனைகள் நடைபெறுகின்றன. 12ஆம் நாளான இம்மாதம் 11ஆம் தேதி திருநெல்வேலி சேவியா் தன்னாட்சிக் கல்லூரிப் பேராசிரியா் அருள்தந்தை அருள்ரவி தலைமையில் திருப்பலி, மாதா திருவுருவ சப்பர பவனி, 13ஆம் நாள் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மறையுரை, புனித அந்தோணியாா் திருவுருவ சப்பர பவனி ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.