பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மளிகைக் கடை உரிமையாளா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே மளிகைக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:31 pm

DIN

சாத்தான்குளம் அருகே மளிகைக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பழங்குளத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் டேவிட் (45). நாசரேத்தில் மளிகைக் கடை நடத்திவந்தாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் வியாபாரத்துக்காக அதிகக் கடன் வாங்கியதாகவும், நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்தோா் தொகையைத் திருப்பிக் கேட்டனராம்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில் சாத்தான்குளம் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.