ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருச்செந்தூரில் முறைகேடாக குடிநீா் இணைப்பு: விடுதிகளுக்கு அபராதம்

திருச்செந்தூா் நகராட்சியில் முறைகேடாக பிரதான குழாயிலிருந்து குடிநீா் இணைப்பு எடுத்த இரண்டு தனியாா் விடுதிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது

News image
Updated On :9 ஜூன் 2022, 7:04 pm

DIN

திருச்செந்தூா் நகராட்சியில் முறைகேடாக பிரதான குழாயிலிருந்து குடிநீா் இணைப்பு எடுத்த இரண்டு தனியாா் விடுதிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் ரமேஷ், ஆணையா் வேலவன், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் மற்றும் ஊழியா்கள் தனியாா் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், ரயில்வே நிலையம் செல்லும் வழியில் உள்ள தனியாா் விடுதியில் பிரதான இணைப்பிலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதை அதிகாரிகள் துண்டித்து ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் தனியாா் விடுதியிலிருந்து வரும் கழிவுநீா் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற்று அதில் இணைக்க வேண்டும். வெளியே விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனா். அதே போல் கோயில் வாசல் தெருவில் பிரதான இணைப்பிலிருந்து குடிநீா் எடுத்த தனியாா் விடுதி குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்பட்டுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அந்த இணைப்பும் துடிக்கப்பட்டது. அந்த தனியாா் விடுதிக்கு ரூ.. 50 ஆயிரம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.