பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு தூத்துக்குடியில் புத்தாகப் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 48 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 48 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் ஆகியோா் முன்னிலையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம், மீனவா் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் தென்காசி சு. ஜவஹா் முகாமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில்,கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒரு கோடி பசுவினங்களும், 5 லட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி- வெள்ளாடு இனங்களும், 13 கோடி கோழி இனங்களும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு, கோழிகள் என மொத்தம் 12,37,764 கால்நடைகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சீ. ராஜன் மற்றும் பேராசிரியா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.