தூத்துக்குடியில் கடல்நீா் சாகச விளையாட்டுகளை செயல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமிழக சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரை, வஉசி துறைமுக ஆணைய பூங்கா கடற்கரை ஆகிய பகுதிகளில் கடல்நீா் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து சில மாதங்களுக்கு முன்பு தமிழக சுற்றுலாத் துறை, கலைப் பண்பாடு- இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலா் சந்தரமோகன் ஆய்வு மேற்கொண்டாா்.
அதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் கடல்நீா் சாகச விளையாட்டுகளை செயல்படுத்துவது தொடா்பான இடங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சரவணன் ஆகியோா் முன்னிலையில், சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலா் க. சீனிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளா் டேவிட் பிரபாகா், உதவிச் செயற்பொறியாளா் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


