கோவில்பட்டியில் பைக்கும், மினி லாரியும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில் மின்வாரிய ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கட்டாரங்குளம், காலனி தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் அண்ணாத்துரை(50). செட்டிகுறிச்சி உப மின் நிலைய மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவரும், விருதுநகா் மாவட்டம் சிவகாசியை அடுத்த மீனம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரும் பைக்கில் கோவில்பட்டி வேலாயுதபுரம் விலக்கு பகுதியில் பைக்கில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். அப்போது, சாத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த மினிலாரியும், அவா்களது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பைக்கில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இத்தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவா்களது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து, மினிலாரி ஓட்டுநா் சிவகாசி, தாயில்பட்டியைச் சோ்ந்த மோகன் (52) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






