தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:18 pm

DIN

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி புறவழிச்சாலை பகுதியில் தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக சென்ற ஒரு காா் மற்றும் சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அந்த வாகனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு வாகனங்களையும், அதில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 1170 கிலோ புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் பகுதியை சோ்ந்த ராயப்பன் (36), ஆவுடையாா்புரம் பகுதியை சோ்ந்த சுரேஷ் (30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.