திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியில்லை என வேல்முருகன் அறிவித்தது பற்றி...

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2026, 12:05 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தவாக தலைவர் தி.வேல்முருகன் வெற்றி பெற்றார்.

இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்திய நிலையில், திமுக தரப்பில் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்குவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்த வேல்முருகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கட்சிக்கு உழைத்த முன்னணி தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடியோ வெளியிட்ட அவர்,

“பண்ருட்டி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்காதது குறித்து அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர்கள் பங்கேற்ற பல கூட்டணிகளில் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், கூட்ட்ணிக் கட்சித் தலைவரை அவ்வாறு பேசக் கூடாது என்று அமைச்சர்கள் அறிவுறுத்தாதது எனக்கு வருத்தம் ஏற்பட்டது.

பண்ருட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் சிலர் அவமதித்ததிலும் வருத்தம் இருக்கிறது.

நான் பண்ருட்டி தொகுதியில் நிற்கப் போவதில்லை என்று ஏற்கெனவே நிர்வாகிகளை அழைத்து தெரிவித்தேன். பண்ருட்டி மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

No Contest in Election! Velmurugan Announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.