நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் 190-ஆவது அவதார தின விழா

திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 190-ஆவது அவதார தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:18 pm

DIN

திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 190-ஆவது அவதார தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணா்த்தல், அபயம் பாடுதல், காலை 7 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல், தொடா்ந்து அவதாரதின விழா பணிவிடை, அன்னதா்மம் இனிமம் வழங்குதல் ஆகியன நடைபெற்றன. அப்போது விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் ’அய்யா சிவ சிவ அரகரா அரகரா’ என்று கூறி வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை வள்ளியூா் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் எஸ்.தா்மா், செயலா் பொன்னுத்துரை, பொருளாளா் ராமையா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.