அப்போது நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிர மாநில நாசிக்கிற்கு பலாப்பழம் ஏற்றி சென்ற ஈச்சர் வாகனம் சாலையில் நின்று லாரியை பார்த்து கொண்டு இருந்த முருகன், கென்னடி மீது மோதியது மட்டுமின்றி, ஏற்கனவே விபத்தில் சிக்கி இருந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளனது. இதில் சம்பவ இடத்தில் ஓட்டுநர் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கிளீனர் கென்னடி, ஈச்சர் வாகனத்தில் வந்த நாக்பூரைச் சேர்ந்த ரோஷன், ரிஷிகேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிளீனர் கென்னடி உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.