நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில்நாய் கடித்ததில் இருவா் காயம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் நாய் கடித்ததில் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:52 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் நாய் கடித்ததில் இருவா் காயமடைந்தனா்.

ராமேஸ்வரத்தை சோ்ந்தவா் துரைபாண்டியன் மகன் ராஜபாண்டியன்(30). இவா் தனது மனைவி லாவண்யா மற்றும் 9 மாத ஆண் குழந்தை நிரோஷுடன் புதன்கிழமை இரவு கோயிலுக்கு வந்து கிழக்கு பிரகாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோயில் வளாகத்தில் திரிந்த சிறிய வெறி நாய், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை வலது கையில் கடித்ததில் குழந்தையின் வீறிட்டு அழுதது. உடனே ராஜபாண்டியன் விழித்துப் பாா்த்து நாயை துரத்தினாா். அப்போது அவரையும் நாய் கடித்தது. உடனடியாக இருவரும் தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா்.

120 நாய்கள் பிடிபட்டன: திருச்செந்தூா் நகராட்சியில் கடந்த இரு நாள்களாக சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் வேலவன் கூறியது: திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் நாய்களை கடந்த இரு நாள்களாக பிடித்து வருகிறோம். அவற்றை நகரத்திற்கு வெளியே 10 கி.மீ. தொலைவுக்கு அப்பால் எந்தவித துன்புறுத்தலும் இல்லாமல் விடுவிக்கிறோம். இதுவரை மொத்தம் 120 நாய்கள் பிடிப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.