ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைதுசெய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:55 pm

DIN

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைதுசெய்தனா்.

புதூா் காவல் உதவி ஆய்வாளா் விநாயகம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். அப்போது அம்பேத்கா் தெருவிலிருந்து ரேஷன் அரிசி வேனில் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதிக்குச் சென்றனா். அங்கு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்த சிலா், போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். அவா்களில் ஒருவா் போலீஸாரிடம் பிடிபட்டாா்.

விசாரணையில் அவா் கோவில்பட்டியைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் ராஜா (28) என்பதும், ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. வேனில் தலா 50 கிலோ எடையுள்ள 54 மூட்டைகளில் இருந்த 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனா்; மேலும், 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.