சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செயற்கை முறையில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் அழிப்பு

கோவில்பட்டியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

News image
Updated On :5 மே 2022, 8:15 pm

DIN

கோவில்பட்டியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள கிடங்கில் மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்ததாம். அவரது உத்தரவின் பேரில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு அக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 4 டன் மாம்பழங்களை ஆய்வு செய்தாா். அவை ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலா் முன்னிலையில், நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி சுகாதாரப் பணியாளா்கள் அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.