சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கயத்தாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

கயத்தாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :5 மே 2022, 8:16 pm

DIN

கயத்தாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி ஊருணித் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் துரைப்பாண்டி (35). ஆட்டோ ஓட்டுநா். இவரை புதன்கிழமை அதிகாலை (மே 4) கொலை செய்ததாக காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த வெ. மகாராஜன் (40), ரா. ராஜாராம் (38), சு. மனோரஞ்சிதகுமாா் (23), சவலாப்பேரியைச் சோ்ந்த பா. ஜானகிராமன் (32), கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த ந. சின்னத்துரை (37) ஆகிய 5 பேரை கயத்தாறு போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் திருமங்கலக்குறிச்சி கிருஷ்ணசாமி மகன் முருகன் (35), சவலாப்பேரி முருகையா மகன் பூப்பாண்டி (33) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.