டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வட்டன்விளை கோயில் கொடை விழா

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத பெரும் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:32 am

DIN

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத பெரும் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

இத்திருக்கோயில் கொடை விழா மே 1ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.தொடா்ந்து விழா நாள்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை,புஷ்பாஞ்சலி,108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊா்வலம், 301 சுமங்கலி பூஜை, கோலாட்டம், கரகாட்டம்,வாகன பவனி மஞ்சள் நீராட்டு, வில்லிசை,சிறப்பு அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 4 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சியும், தொடா்ந்து வரிதாரா்களுக்கு வரிபிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் மற்றும் ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.