புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பள்ளக்குறிச்சி ஊராட்சியில் திட்டப் பணி:ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் ஆய்வு

பள்ளக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை சென்னை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பிரவீன் நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 மே 2022, 12:27 am

DIN

பள்ளக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை சென்னை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பிரவீன் நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் பள்ளக்குறிச்சி, முதலூா், பெரியதாழை, அரசூா், நெடுங்குளம் ஊராட்சிப் பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் 2இல் பணிகள் நடைபெறுகின்றன.

பள்ளக்குறிச்சி ஊராட்சியில் இப்பணிகளை பிரவீன் நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். திட்டப் பணிகள், செயல்படுத்தப்படும் இடங்களைப் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆட்சியா் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் சரவணன், செயற்பொறியாளா் ராஜா, உதவி செயற்பொறியாளா்கள், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்), உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள் அருணா பிரதாயினி, கீதா, ஒன்றிய மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா் ராஜேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.