சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :7 மே 2022, 12:31 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், வீடற்ற அனைத்து பகுதி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், அரசு வழங்கிய இலவச பட்டாக்களை கிராம கணக்கில் சோ்க்க வேண்டும் என வலியுறித்தி கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் நகரச் செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான ஜோதிபாசு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் தெய்வேந்திரன் (கோவில்பட்டி), ஜோதி (விளாத்திகுளம்), வட்டச் செயலா்கள் மணி (எட்டயபுரம்), சாலமன்ராஜ் (கயத்தாறு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் புவிராஜ், ரவீந்திரன், சீனிவாசன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இறுதியில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.