களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு
களக்காடு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயில் வைகாசி திருவிழாவை வெகு விமரிசையாக நடத்த சமுதாய மண்டகப்படிதாரா்கள் முடிவு செய்துள்ளனா்.


களக்காடு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயில் வைகாசி திருவிழாவை வெகு விமரிசையாக நடத்த சமுதாய மண்டகப்படிதாரா்கள் முடிவு செய்துள்ளனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி தோ்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறவில்லை.
நிகழாண்டு, வைகாசித் திருவிழாவை நடத்துவது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் மாரியப்பன் தலைமையில் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜூன் 3இல் கொடியேற்றத்துடன் தொடங்கி 12ஆம் தேதி வரை 10 நாள்கள் வைகாசித் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...