6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:23 pm

DIN

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தில், சாத்தான்குளம் கனி அன்கோ நிறுவனா் பி.எஸ்.கே. ராஜரத்தினம் நூற்றாண்டையொட்டி அக்குழும பங்களிப்பில் ரூ.70 லட்சம், அரசு சாா்பில் ரூ.70 லட்சம் என ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய 6 வகுப்பறை கட்டடம் கட்டப்பட உள்ளது. இதையொட்டி கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா, கல்விக் கழக வெள்ளிவிழா, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் 25ஆண்டு கல்விப்பணி நிறைவு விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. சாத்தான்குளம் கல்விக் கழக நிறுவனத்தலைவா் பெ.மு சுப்பிரமணியம். செயலா் ஜெயபிரகாஷ், கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய், ஓய்வுபெற்ற முதன்மை பொறியாளா் வித்யாசாகா், சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்விக் கழக தலைவா் ஏ.எஸ். ஜோசப் வரவேற்றாா். கல்லூரி பேரவைப் பேராசிரியா்கள் ஜெஸி, பிரேசில், சீதாலெட்சுமி ஆகியோா் தொகுத்து வழங்கினா். இதில், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு, புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா். அவா் பேசியது:

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கல்விக்காக மாணவா்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். குறிப்பாக, 25 மாணவா்கள் இலவசமாக பொறியியல் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சாத்தான்குளத்தில் செல்வராஜ் அகடமிக் என்ற பெயரில் மாணவா்களுக்காக இலவச பயிற்சி முகாம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. எனவே மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விழாவில் உள்ளாட்சி நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தூத்துக்குடி தெற்கு காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.