தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க சாத்தான்குளம் வட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். வட்ட செயலாளா் முருகானந்தம் வரவேற்றாா். சங்க நடவடிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் பேசினாா். வரவு செலவு கணக்குகளை வட்ட இணைச்செயலா் இசக்கியம்மாள் வாசித்தாா். தீா்மானங்களை வட்ட இணைச்செயலா் சேசுமணி முன்மொழிந்தாா். முன்னாள் அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் பாலகிருஷ்ணன், ஜோசப் கனகராஜ், சுடலைக்கண், அல்போன்சா, வசந்தா, பரிமளா, சுவாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.