சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி கல்லூரியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:41 pm

DIN

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், ஜூனியா் ஜே.சி., தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சாா்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு கல்லூரிச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் மகேஷ் முன்னிலை வகித்தாா். முதல்வா் கந்தசாமி வாழ்த்திப் பேசினாா். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவா் லட்சுமி சித்ரா தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற 36 பேரிடமிருந்து ரத்தம் சேகரித்தனா். ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளா் சேவியா், ரத்த தானத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா்.

ஏற்பாடுகளை ஜூனியா் ஜே.சி. தலைவா் பிரசன்னா, உதவிப் பேராசிரியா்கள் ஜெய்சிங்கராஜ், ஆனந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.