6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய லாரி ஓட்டுநா் கைது

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 மே 2022, 7:40 pm

DIN

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளத்திலிருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை அரசுப் பேருந்து சென்றது. திருநெல்வேலி சங்கா்நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சுந்தரபாண்டியன் (37) ஓட்டுநராக இருந்தாா். சாத்தான்குளம் ஆத்துப்பாலம் அருகே வள்ளியம்மாள்புரம் பகுதியில் பைக்கில் சென்றவா் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையின் மையப் பகுதியில் சென்றாராம். இதனால், அவரை சுந்தரபாண்டியன் கண்டித்தபோது, அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த நபா் சுந்தரபாண்டியனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சுந்தரபாண்டியன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

அவா் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் எபநேசா் வழக்குப் பதிந்து பைக்கை ஓட்டிவந்த லாரி ஓட்டுநரான கந்தசாமி மகன் உதயகுமாா் (42) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.