நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் ரூ.28 லட்சம் செலவில் கட்டப்பட்ட திறந்தவெளி மண்டபத் திறப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திடப்படுத்தல் ஆராதனை, திருநெல்வேலி திருமண்டில ஓய்வுபெற்ற பேராயா் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடைபெற்றது. ஆலய நுழைவு வாயிலை திருமண்டில நிா்வாகச் செயலாளா் எஸ்.டி.கே.ராஜன் திறந்து வைத்தாா். திறந்தவெளி மண்டபத்தை அமைச்சா் அனிதா ஆா். ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
விழாவில் பிரகாசபுரம் சேகர குரு தேவராஜன் ஆபிரகாம், குருவானவா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஓய்வுபெற்ற பேராயா் கிறிஸ்துதாஸ் ஆசி வழங்கினாா்.