பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி

பேய்க்குளம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2022, 7:28 pm

DIN

பேய்க்குளம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளத்தையடுத்த பேய்க்குளம் அருகே உள்ள மேலமீரான்குளம் சுப்பையா மனைவி மூக்கம்மாள் (58). ஆடு, மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். வியாழக்கிழமை மாலை மேய விட்ட ஆடு, மாடுகளை அழைத்து வர சென்ற போது அங்கு வயல் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிா்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மூக்கம்மாள் உயிரிழந்தாா்.

இந்நிலையில், மூக்கம்மாள் இறந்தது, திருநெல்வேலி மாவட்ட காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பகுதி என்பதால், இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு நாங்குனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.