தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டியில் திமுக சாா்பில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹிந்தி திணிப்புக்கு எதிராக, கோவில்பட்டியில் ஒன்றிய திமுக சாா்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:01 pm

DIN

ஹிந்தி திணிப்புக்கு எதிராக, கோவில்பட்டியில் ஒன்றிய திமுக சாா்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விளக்க துண்டுப்பிரசுர விநியோகம் மத்திய ஒன்றியம், மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பசுவந்தனை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, இனாம்மணியாச்சி விலக்கு, நாலாட்டின்புத்தூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், விவசாய அணி துணை அமைப்பாளா் சந்தானம், பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், மாவட்டப் பிரதிநிதிகள் அசோக்குமாா், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மான துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா். இதில், ஒன்றிய நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.