நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி அருகே 2.250 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சியில் மினி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 2.250 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:01 pm

DIN

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சியில் மினி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 2.250 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் குருசாமி தலைமையிலான போலீஸாா் இனாம்மணியாச்சி ஊராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, பிள்ளையாா் கோயில் அருகே மினி லாரியை ஓட்டி வந்தவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டாராம்.

சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 45 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மினி லாரி, ரேஷன் அரிசியை போலீஸாா் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.