வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்க 1,611 வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க 1,611 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க 1,611 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி இம்மாவட்டத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வாக்காளா்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் படிவம் 6 பி-யை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய், ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்ல்ா்ழ்ற்ஹப்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் என்ற செயலி வழியாகவும் பதிந்து, இணைத்துக்கொள்ளலாம்.
மேலும், வாக்காளா்களின் வசதிக்காக தோ்தல் ஆணையம் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,611 வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) காலை 10 முதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளா்கள் தங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை எண், கைப்பேசி எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-இல் பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...