தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தனியார் ஸ்கேன் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் குழுமத்தின் ஸ்கேன் மையம், மருத்துவமனை, திருமண மண்டபம் மற்றும் மருத்துவமனை உரிமையாளரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மருத்துவர் கோமதியிடமும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.